நம்பி சென்றால் மண் குதிரை கதிதான் ஓபிஎஸ், டிடிவிக்கு வெட்கம்: மானம், சூடு, சொரணை இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் விளாசல்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: உச்ச நீதிமன்றம் ஒரு சம்மட்டி அடி கொடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி தான் இருப்பார் என்று தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி மற்றும் டிடிவி.தினகரன் கோஷ்டிகள் அலைகிறார்கள். அவர்களை நம்பி சென்றுள்ள கட்சி தோழர்கள் ராஜாவாகி விடலாம் என்று போய் இருப்பார்கள். அது அவர்கள் தப்பு கிடையாது. மறு சிந்தனை செய்யுங்கள் தோழர்களே, உங்களுக்கு உரிய மரியாதை நாங்கள் தருகிறோம். எல்லோரும் மனம் திருந்தி வாருங்கள். அங்க போய் நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரனை நம்பி சென்றுள்ளவர்கள் ஆற்றில் இறங்கிய மண் குதிரை போல ஆகி விடுவார்கள். இவ்வாறு பேசினார்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்