இதில் மாணவி கர்ப்பமானார். தற்போது 9 மாத கர்ப்பிணியான அவர், ராஜவேலுவை திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாணவிக்கு போன் செய்து, ‘திருமணம் விஷயமாக பேச வேண்டும்’ என கூறி நெடுங்கல் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு ராஜவேலு வரவழைத்தார். அங்கு பெல்ட்டால் மாணவியின் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றாராம்.இதுகுறித்து அனக்காவூர் போலீசில் கர்ப்பிணி மாணவி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜவேலுவை நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் ராஜவேலுவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.