பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது புகார் அளித்த மாணவியை காணொளியில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது புகார் அளித்த மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாணவியை ஆஜர்படுத்தும் வரை சிவசங்கர் பாபா மீதான வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் மறுப்பு தெரிவித்துவிட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!