சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது


நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள மின்வாரிய காலனியை சேர்ந்தவர் கந்தசாமி (59). இவர், நிலக்கோட்டை மின்வாரியத்தில் போர்மேனாக உள்ளார். இவர் மகள் உறவுமுறையான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், கந்தசாமி மீது போக்சோவில் வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர். 6 மாதத்தில் ஓய்வுப்பெறும் நிலையில் உள்ள கந்தசாமி போக்சோவில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் (40).

இவர் ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றினார். இந்த கடையில் 6 மாதத்துக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த 16 வயது றுமியை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவந்த நிலையில், இருவரும் கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் அழைத்துவந்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததற்காக சரவணக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்