தகவலை கேட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜா, ரத்தினம், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரத்தினம் கடந்த ஆண்டு இறந்ததால் இருவர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ராஜா, லட்சுமணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.