சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

புழல்: புழல் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புழல் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (67). இவர், சோபா பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு முன்பு காலி மைதானம் உள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 4ம் மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் அங்கு விளையாடியபோது, விஜயகுமார் அவர்களிடம் நைசாக பேசி, தனது கடைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமலாரத்தனம், முதியவர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தில், கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு