வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் டெல்லி கணேஷ் அடித்து துன்புறுத்தி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பி வந்த அவரது மனைவி, தன் மகள் தொடர்ந்து அழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, நடந்ததை பற்றி மகளிடம் விசாரித்தார். இதில், டெல்லி கணேஷ் தவறாக நடந்து கொண்டது குறித்து தன் தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
உடனே, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டெல்லி கணேஷ் மீது நேற்று புகார் அளிக்கப்பட்டது. டெல்லிகணேசிடம் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து, டெல்லிகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.