Sunday, September 15, 2024
Home » மகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் தந்தை கைது

by Ranjith

ஆவடி:ஆவடியைச் சேர்ந்தவர் டெல்லிகணேஷ் (40). அதே பகுதியில் உள்ள பேட்டரி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு 30 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணுடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவரால் கைவிடப்பட்ட அந்த பெண், டெல்லிகணேசனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது 8 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பெண் வேலைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் டெல்லி கணேஷ் அடித்து துன்புறுத்தி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பி வந்த அவரது மனைவி, தன் மகள் தொடர்ந்து அழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, நடந்ததை பற்றி மகளிடம் விசாரித்தார். இதில், டெல்லி கணேஷ் தவறாக நடந்து கொண்டது குறித்து தன் தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

உடனே, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டெல்லி கணேஷ் மீது நேற்று புகார் அளிக்கப்பட்டது. டெல்லிகணேசிடம் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து, டெல்லிகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi