சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வலை கைது செய்யக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. ஹாசன் தொகுதியில் மகளிர் அமைப்பினர் ஏராளமானோர் ஒன்றுதிரண்டு பதாகைகளை ஏந்தி பேரணி நடத்துகின்றனர். 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறி பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டிருந்தார். ஜெர்மனியில் இருந்து இன்று நாடு திரும்பும் பிரஜ்வலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.