மதுரை: 3 ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி தாளாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை தல்லாகுளம் அருகே உள்ள பள்ளியில் 3 ஆசிரியைகளுக்கு தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பள்ளி தாளாளர் சேத் டேனியலின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கு பதியப்பட்ட மற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.