பாலியல் குற்ற சம்பவங்களை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

செங்கல்பட்டு:சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற சம்பவங்களை கண்டித்து செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி தனியார் பள்ளியில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளுக்கு எதிரான இந்த குற்ற சம்பவத்தை கண்டித்து செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கைதான குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வழக்கை விரைந்து முடித்து விரைவில் தூக்கு தண்டனை பெற்ற தர வேண்டும் என கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்