மகாராஷ்டிராவில் பள்ளியில் சிறுமிகளை சீரழித்த பாலியல் குற்றவாளி சுட்டுக்கொலை: விசாரணைக்கு அழைத்து வரும்போது வேனில் என்கவுன்டர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் தனியார் நர்சரி பள்ளியில் கழிப்பறைக்கு வந்த பிரீ கேஜி படிக்கும் மூன்றரை மற்றும் 4 வயது சிறுமிகளுக்கு அங்கு பணியில் இருந்த அக்ஷய் ஷிண்டே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அக்ஷய் ஷிண்டேயை காவலில் எடுக்க தானே போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் இதற்கான அனுமதி வாங்கிய அவர்கள், அக்ஷய் ஷிண்டேயை போலீஸ் வேனில் அழைத்துக் கொண்டு, தானே குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மாலை 6.30 மணியளவில் மும்ப்ரா பைபாஸ் அருகே வரும்போது, தப்பிச் செல்லும் நோக்கில் அக்ஷய் ஷிண்டே போலீஸ் வாகனத்தில் போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து போலீசை நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டுள்ளார். இதில் ஒரு போலீஸ் மீது குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. ேபாலீசார் திருப்பி சுட்டதில் அக்ஷய் ஷிண்டே பலியானார்.

Related posts

ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை!

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!