பாலியல் தொழில் நடப்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

பூந்தமல்லி: வடபழனி 100 அடி சாலையில் ‘ஜிஞ்சர்’ என்ற பெயரில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த 31ம் தேதி வந்த நபர் ஒருவர், தன்னை விபசார தடுப்பு பிரிவு அதிகாரி என்றும், உங்கள் விடுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எனக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. எனவே விடுதியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையையும் அந்த நபர் சோதனை செய்தார். பிறகு, எனக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் தர வேண்டும் என்றுஊழியர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஊழியர்கள் விடுதி உரிமையாளரிடம் கூறினர். அதன்படி உரிமையாளர் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அந்த விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 31ம் தேதி வந்த நபர், விபசார தடுப்பு பிரிவு அதிகாரி இல்லை என்றும், ஆயுதப்படை காவலர் பவஷா எனவும் தெரியவந்தது. இவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து, பணியாற்றி வருவதும், கடந்த 2022ம் ஆண்டு திருவான்மியூர் பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், துணை கமிஷனரின் தனிப்படை அதிகாரி என கூறி ₹5 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது. இதுபோல் பல இடங்களில் ஸ்பா மற்றும் தங்கு விடுதிகளில் விபசார தடுப்பு பிரிவு அதிகாரி என மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து, ஆயுதப்படை காவலர் பவஷாவை வடபழனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து