இதனிடையே இந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வரும் 24ம் தேதிக்குள் வழக்கை முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சிறப்பு டிஜிபி தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனைகேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று (19ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.