டெல்லி: பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி எச்.டி.ரேவண்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார். பாலியல் புகார் மீது சாட்சி கூறாமல் இருக்க பெண்களை கடத்தியதாக போடப்பட்ட FIR-ஐ ரத்து செய்யக்கோரி எச்.டி.ரேவண்ணா மனுவில் தெரிவித்திருந்தார்.