இதேபோல், புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், புனித அந்தோணியார் நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அங்கு குழாய்கள் மூலம் குடிநீரிலும் கலந்து விடுகிறது. எனவே, 23, 24 மற்றும் 30வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் திட்டப் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.