சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ

புதுக்கோட்டை: ராமேஸ்வரம்-சென்னை இடையே சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 8.51 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 12.20 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர்-நார்த்தாமலை இடையே வந்தபோது ரயில் இன்ஜினில் உள்ள டர்பு வால்வு டீப் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து இன்ஜின் முழுவதும் புகை கிளம்பியது. இதை சுதாரித்த இன்ஜின் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தியதுடன் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பானை வைத்து தீயை அணைத்தார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து பழுது நீக்கப்பட்டு, ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 2.02 மணிக்கு ரயில் சென்னை புறப்பட்டு சென்றது. கடந்த 18ம்தேதி அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் சேது எக்ஸபிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தானாகவே தனியே கழன்று ஓடியது குறிப்பிடத்தக்கது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு