வேலைக்கார சிறுமி சித்ரவதை சமாஜ்வாடி எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு

படோஹி: உத்தரப்பிரதேசத்தின் படோஹி தொகுதியின் சமாஜ்வாடி எம்எல்ஏ ஜாகித் பெக். அவரது மனைவி சீமா பெக். மாலிகானா மொகல்லாவில் உள்ள எம்எல்ஏ வீட்டில் வேலை செய்துவந்த 17வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக எம்எல்ஏ வீட்டில் பணி செய்து வருவதாக தெரியவந்தது. சிறுமியிடம் நடத்திய விசாரணையில் எம்எல்ஏ ஜாகித் மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோர் அடித்து சித்ரவதை செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ மற்றும் அவரது மனைவிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின