இதையடுத்து 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘‘மத்திய அரசின் ஒப்புதலை எதிர் பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். ஆனாலும், பிரதமர் மோடி மாநில அரசுக்கு தடுப்பூசி கொள்முதல் வழங்க அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசே தடுப்பூசிகளையும், மருத்துவ கருவிகளையும் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. ஒன்றிய அரசுக்கு தடுப்பூசி சப்ளை செய்த சீரம் நிறுவனம்தான் ரூ.502.5 கோடி தேர்தல் நிதியாக பாஜகவுக்கு வழங்கியுள்ளது தற்போது தேர்தல் பத்திரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.