சென்னை: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. உற்பத்தியை தொடங்குவதன் மூலம் 90 நாட்களில் 6-7 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7,830 ஆக அதிகரித்துள்ளது.