இந்நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில் 2 பேரையும், ஒரகடம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், குற்றவாளிகள் ஏழுமலை, சக்தி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலூர் மத்திய சிறை அதிகரிகளிடம் வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.