தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை, போலீசார் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (24) மற்றும் வாலாஜாபாத் தாலுகா, ஏலக்காய்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (21) ஆகிய 2 பேர் மீதும், ஒரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில் 2 பேரையும், ஒரகடம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், குற்றவாளிகள் ஏழுமலை, சக்தி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலூர் மத்திய சிறை அதிகரிகளிடம் வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்