மதுரை: பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறப்புகள் ஏற்படுவது தொடர்பான செய்திகளைப் தினந்தோறும் பார்க்க முடிகிறது. தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை மீண்டும் அணுகலாம். 2021-ல் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.