உள்நாட்டு பரிவர்த்தனை, இறக்குமதி ஆகியவை குறைந்துள்ளதால் தான் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாக வரி வசூல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.27 லட்சம் கோடியாக உள்ளது. பொருட்கள் இறக்குமதி மூலம் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,390 கோடியாக உள்ளது. இந்த மாதத்தில் ரூ.20,458 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டன. ரீபண்ட் கழித்தால் செப்டம்பரில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.53 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம்.