சென்னை: மனிதனை இனம், மொழி, மதத்தால் பிரித்து பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக பாஜக பார்க்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஒடிசா ரயில் விபத்தின்போது தமிழர்களுக்கு உறுதுணையாக நின்றவர் வி.கே.பாண்டியன். மதுரை மண்ணின் மறத்தமிழன் பாண்டியன் அறத்தின் வழிநின்று வென்று காட்டுவார். தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி மொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.