சென்னை: தனித் தீர்மானம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுக்கின்ற முயற்சி என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் மீது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; நமது உரிமை பறிபோகாமல் இருப்பதற்காக ஒரு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மதம் என்று இப்படி போகும் திட்டம் ஒத்து வராது. இவ்வாறு கூறினார்.