சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.