சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, மனுவை தள்ளுபடி செய்ய பதில் மனுவில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.