சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.