செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் குறித்து செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி நிர்மல் குமார் பதிவிட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தனிநீதிபதி தடை விதித்தார். இந்நிலையில், தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சி.டி.ஆர்.நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்