சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என ஆளூநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.