கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்த நிலையில், சிறு திருத்தம் ஏற்படும் வகையில் இன்று இறக்கம் கண்டு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு மத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளது. சென்செக்ஸ் தற்போது 1,024 புள்ளிகள் சரிந்து 84,547 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 296 புள்ளிகள் குறைந்து 25,882 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் சரிவால் முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.