உச்சம் தொட்ட சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு.!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிந்து 79,033 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தின்போது 428 புள்ளி உயர்ந்த சென்செக்ஸ் 79,671 புள்ளி என்ற புதிய உச்சம் தொட்டு பின் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் குறைந்து 24,011 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு