சென்னை: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வில் ரூ.2,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படவில்லை என்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ரூ.1,000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரிவித்தது. மேலும் நில மதிப்பீட்டை குறைத்துக் காண்பித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.