செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திரப் பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை: வருமானவரித்துறை தகவல்

சென்னை: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வில் ரூ.2,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படவில்லை என்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ரூ.1,000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரிவித்தது. மேலும் நில மதிப்பீட்டை குறைத்துக் காண்பித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!