அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர், ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ், பைக்கில் இருந்தபடியே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நாங்குநேரியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (22), மாரி (19) ஆகிய இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் சரணடைந்தனர். விசாரணையில் நெல்லை அடுத்த தாழையூத்து பகுதியில் இருந்து ரயிலில் டீ விற்கும் கான்ட்ராக்ட் வேலை செய்த மந்திரமூர்த்தி, மாரிக்கும், ராஜேசுக்கும் குளிக்கச் செல்லும் இடத்தில் ஏற்ட்ட தகராறில் முன்விரோதம் உருவானதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் மீது தீராத பகையில் இருந்து வந்த இருவரும் காத்திருந்து பழி தீர்த்ததாகக் கூறப்படுகிறது.