அதன்படி இன்று காலை பள்ளி பேருந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 30 மாணவர்கள் இருந்தனர். பள்ளி அருகே உள்ள அரிதாரிமங்கலம் கிராமத்தில் சென்றபோது சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி பஸ் திடீரென மோதியது. இதில் டிரான்ஸ்பார்மரில் உள்ள பியூஸ் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்தபோது பஸ்சில் இருந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் 7பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைபார்த்த பொதுமக்கள் மற்றம் மாணவர்களின் பெற்றோர் சம்பவம் நடந்த பகுதியில் திரண்டனர். மாணவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மாற்று பேருந்து மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.