இதனை வரவேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், “15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ கடினமான நாட்கள், துயரம்தனிமை எல்லாவற்றையும் தனது அசைக்கமுடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ள செந்தில் பாலாஜி அவர்களுக்கு எனது அன்பும்,நல்வாழ்த்துக்களும்! அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள். அதை எதிர்த்து நின்று வெற்றியடைவார்கள் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறையால் அநீதியாக கைது செய்யப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் சட்டப்போராட்டத்தை சந்தித்து வெற்றியடைந்துள்ளார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.