ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகத்தில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி காட்பாடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.