சென்னை செம்மொழிப் பூங்கா எதிரே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,000 கோடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை செம்மொழிப் பூங்கா எதிரே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,000 கோடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவர், தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதனை பயன்போடுத்தி வந்தார். இதனை மீட்க கடந்த 1989ம் ஆண்டு அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதி செய்தது. தோட்டக்கலை சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த உணவாக விடுதி ஆக்கிரமித்திருந்த நிலத்தை கையகப்படுத்தி தோட்டக்கலை சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த நிலத்திற்கெதிரே 6.36 நிலத்திலிருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அந்த இடத்தை கையகப்படுத்தி, தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை வசம் ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் வருவாய்த்துறை கையகப்படுத்திய நடவடிக்கையில் விதிமுறை மீறல் உள்ளதாகவும், முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த நிலத்தை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராக கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு விதிமுறைகளுக்குட்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு தோட்டக்கலை சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது என்ற வாதத்தை முன்வைத்தார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்தும், தோட்டக்கலை துறை சங்கம் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு