சென்னை: சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாறுவது பற்றி தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபானம் பரிமாற உரிமம் தரும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதா என பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. திருத்தம் கொண்டு வந்து பேரவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டதா எனவும் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.