சென்னை: மிக்ஜம் புயல் மற்றும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.