பொதுவாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதால் உடலில் சில நோய் வராமல் தடுப்பதுடன் ஒருவரது சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது.இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது. பொதுவாக இரும்பு சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. செம்பு உடலில் இரும்பை உறிஞ்ச உதவுவதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும் செம்பு எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது. இதனால் மூட்டுவலிக்கு சரியான மருந்தாக அமைகிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. செம்பு ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்தும். அந்த வகையில் செம்பு என்பது மனித உடல் நலத்துக்கு உதவும் உலோகம் ஆகும்.இதில் தண்ணீர் வைத்துப் பருக பலன்கள் ஏராளமாகக் கிடைக்கும். குறைந்தபட்சம் பிளாஸ்டிக் குடங்கள், வாட்டர் கேன்களையாவது தவிர்க்கலாம்.
– அ.ப. ஜெயபால்