செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து 645 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 15.72 அடி, மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடி, நீர்வரத்து 645 கன அடி, நீர் வெளியேற்றம் 136 கன அடியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக ஒரே நாள் இரவில் 44 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஏரிக்கு பூஜ்ஜியத்தில் இருந்த நீர் வரத்தானது 645 கன அடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்