முதல்வர் குறித்து அவதூறு மதுரை நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ ஆஜர்

மதுரை: அதிமுக சார்பில் கடந்த 29.5.2023ல் முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக அரசு குறித்தும், சட்டம் – ஒழுங்கு குறித்தும் முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அ.பழனிச்சாமி, மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நீதிபதி முன் ஆஜரானார். செல்லூர் ராஜூ, தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராவதாக அபிடவிட் தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் ெகாண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு