இது மாவோயிஸ்ட் தலைவரின் நெருங்கிய உறவினரின் மருத்துவ கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில்,” பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மாவோயிஸ்ட்கள் மிரட்டிபணம் பறித்துள்ளனர். இதில் ரூ.1.13 கோடி சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகள் மூலமாக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ” என்று கூறப்பட்டுள்ளது.