அப்போது விச்சூர் கிராமம், எஸ்.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு ஆயில் குடோனில் இருந்த பேரல்களில் சுமார் 4 லட்சத்து 38 ஆயிரம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சக்திவேல், பாஸ்கர், பழனிச்சாமி ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். அப்போது குடோன் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் ஸ்ரீ சத்யசாய் லூப்ரிகன் என்ற ஆயில் நிறுவனத்தை கோயம்புத்தூரில் நடத்தி வருவதாகவும், விச்சூர் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் கருப்பு ஆயிலை அதிகளவில் பதுக்கி வைத்து அதை சட்டவிரோதமாக லாரிகள் மூலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அந்த ஆயிலை பேரல்களில் நிரப்பி, பின்னர் பேரல் பேரலாக விற்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கருப்பு ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் பணிபுரிந்த 3 ஊழியர்களை கைது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர்கள் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.