பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

*கேரளா வாலிபர் கைது

பந்தலூர் : பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடியில் போலீஸ் வாகன சோதனையில் கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்லும் உயர் ரக போதை பொருள் பிடிப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குறிய ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அதிகம் போதை தரக்கூடிய எம்டிஎம் என அழைக்கப்படும் உயர் ரக போதை பொருள் சுமார் 30 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போலீஸ் விசாரனையில் கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த நிஜாஷ் (30) என தெரியவந்தது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாடுகாணி வழியாக கள்ளிக்கோட்டை பகுதிக்கு கொண்டு சென்று போதை பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது சுமார் 60 ஆயிரம் பதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்து தேவாலா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு