சோதனையில் டிராக்டரிலும் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் மினிலாரியில் வந்தவர்கள் துதேகுல பாஷா(42), முகமது ரபி(20), அரவோல்லா ரபி(19) என்பதும், டிராக்டரில் வந்தவர் சிவசாய்(24) என்பதும் தெரிந்தது. இவர்கள் அனைவரும் கூட்டாக நல்லவனப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று செம்மரங்களை வெட்டி ஜெகனன்னா காலனியில் உள்ள துதேகுல பாஷா வீட்டில் பதுக்கி வைத்து பின்னர் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1.60கோடி மதிப்புள்ள 4டன் எடையுள்ள 158 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.31 லட்சம் மதிப்புள்ள மினிலாரி, டிராக்டர், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து துதேகுலபாஷா உள்பட 4பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.