அரசு பஸ்சில் ரூ.70 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை நோக்கி வந்த கர்நாடகா அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். பஸ்சில் கர்நாடக மாநிலம் தாவண்கெரே பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24) என்பவரது பையில் கட்டு கட்டாக ரூ.35 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.35 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் அரசு பேருந்தில் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.35 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு