கடந்த 7ம் தேதி மாலை, புத்தளம் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், படகு ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் பீடி இலைகளை, தமிழக கடலோரப் பகுதியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் படகில் இருந்த ரூ.2 லட்சம் இலங்கை மதிப்பிலான 21 பார்சல் அடங்கிய 683 கிலோ பீடி இலைகள் மற்றும் பைபர் படகினையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.