சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை: தெற்கு இணை ஆணையர் விளக்கம்

சென்னை: சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவில் ராஜம்பேட்டை என்ற இடத்தில் நேற்று சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். போலீசாரை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் சீசிங் ராஜா. சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளன. வேளச்சேரி வழக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுக்கும்போது சீசிங் ராஜா தப்ப முயற்சி செய்துள்ளார்.

Related posts

பச்சை பூமியில் மஞ்சள் புன்னகை

1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?: பவன் கல்யாண் கேள்வி!!